Categories
மாநில செய்திகள்

ஆ.ராசா பேசியது ரொம்ப தப்பு…. முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கணும்…. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பா.ஜ.க….!!!!

இந்துமதம் பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசியதாக டிஜிபி அலுவலகத்தில் தி.மு.க எம்பி ஆ.ராசாமீது பா.ஜ.க மாநில துணைத்தலைவரான கரு.நாகராஜன் புகாரளித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மதி இழந்து, தகுதி இழந்து, தரம் தாழ்ந்து மத நல்லிணக்கத்துக்கு எதிராக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். அனைவருக்கும் பொருந்தும் விதமாக இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களை தவிர அனைத்து ஆண்மகன்களும் விபச்சாரியின் மகன் என பேசுகிறார். இதனை கண்டித்து நாங்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளோம். இவர் பேசியது எங்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையும் புண்படுத்தும் விதமாக இருக்கிறது.

இது திட்டமிட்ட சதிபேச்சு ஆகும். தான் எடுத்த உறுதிமொழிக்கு எதிரான போக்கை அவர் பின்பற்றி வருகிறார். இது தொடர்பாக மேலும் கரு.நாகராஜன் கூறியதாவது, நீ இஸ்லாமியர் ஆக பிறந்தால் நல்ல தாய் பெற்ற மகன், கிறிஸ்துவாக பிறந்தால் நல்ல தாய் பெற்ற மகன், ஆனால் நீ இந்துவாக இருந்தால் விபச்சாரியின் மகன் என பொதுமேடையில் பேசி உள்ளார். ஆன்மிகம் செழித்த இந்த பூமிக்கு, தமிழக மக்களுக்கு, கடவுளை வணங்குபவர்களுக்கு இதைவிட அவமானம் எதுமில்லை. இது திமுக-வின் சதியாக கூட இருக்கலாம். சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சதியாககூட இருக்கலாம். முதல்வர் ஸ்டாலின் இதன் மீது நடவடிக்க எடுத்தாக வேண்டும்.

ஆ.ராசா மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம். தி.மு.க தலைவர் நடவடிக்கை எடுத்து அவரை திமுக-வை விட்டு நீக்கவேண்டும். இல்லையெனில் உங்கள் தூண்டதலாலேயே பேசுகிறார் என எடுத்துக்கொள்ளப்படும். வடமாநிலங்களில் மத தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய பாஜக-வினரை பாஜக மேலிடம் நீக்கி இருக்கிறது. அதுபோன்று திமுக ஆ.ராசாவையும் நீக்கவேண்டும். பா.ஜ.க சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், இந்து குடும்பங்களை அவமானபடுத்தும் செயலாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

உண்மையில் மாண்புள்ள முதல்வர் எனில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதற்கிடையில் வீரமணி பேசுவதை எல்லாம் நாங்கள் பெரிதாக கண்டுக்கொள்ளமாட்டோம். அவரின் பிழைப்பு அப்படி ஆகும். எனினும் பலலட்சம் மக்களின் வாக்குகளை பெற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி அப்படி பேசலாம். இது திமுக-வுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், கோடிக் கணக்கான மக்களுக்கும் எதிரான செயல் என்பதை விரைவில் புரிந்துகொள்வார்கள். இந்து என்றால் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி. என அனைவரும் வந்து விடுகிறார்கள். அனைவரையும் சேர்த்து தான் ஆ.ராசா சொல்கிறார். நம் அனைவரையும் விபச்சாரியின் மகன் என நம் தாயைஇழிவாக பேசுகிறார் என அவர் தெரிவித்தார்

Categories

Tech |