மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்தவெளியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேது போரா என்ற கிராமத்தில் நேற்று 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள், புல்டோசர் வாகனங்களில் உதவியுடன் ஆழ்துளை கிணற்றை நோண்டு குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.