Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழபாலாமடை பகுதியில் நடராஜன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மணப்படை வீடு அருகே இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு அருகில் நடராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்த நடராஜன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |