ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆற்றில் ஆட்டோ ஒன்று கவிழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 14 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சங்கம் கிராமத்தை சேர்ந்த சிலர், அருகில் உள்ள கோவிலுக்கு ஷேர்ஆட்டோவில் 12 பேர் சென்றுள்ளனர்.
இந்தநிலையில், ஆட்டோ பீராபேரூ ஆற்றுப் பாலத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த லாரி மீது மோதி பீராபேரூ ஆற்றில் 12 பேருடன் கவிழ்ந்தது. மேலும் ஆட்டோவில் பயணித்த 12 பேரில் மீட்கப்பட்டுள்ளனர். 7 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். அதில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுவருகிறது.