தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயகுமார் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் இது குறித்து கூறி கவலையில் இருந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயகுமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.