Categories
தேசிய செய்திகள்

ஆறுகளில் கழிவு நீர் கலப்பு….. மாநில அரசுக்கு ரூ.120 கோடி அபராதம்…. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி….!!!!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு கொண்ட விசாரணையில், கோரக்பூர், அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளொன்றுக்கு 55 மில்லியன் லிட்டர் கழிவுநீர் ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் கலக்க விடப்படுகிறது. மேலும் உத்தரபிரதேசம் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, திட்டமிடப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பற்றி தெளிவாக இல்லை. உயிரி தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு பணிகளுக்கு பிறகும் நீரின் தரம் சரியாக இல்லை. தற்போது நீர் மாசுபடுதல் தொடர்கிறது. இதனையடுத்து 3.8 லட்சம் மெட்ரிக் டன் பதப்படுத்தப்படாத மரபுவழி திடக்கழிவு உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கவிட்டதற்கு ரூ.110 கோடி, பதப்படுத்தப்படாத மரபுவழி திட்டக்கழிவுக்கு ரூ.10 கோடி என ரூ.120 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த அபராதத்தை ஒரு மாதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவை நியமித்து சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தவறினால் மேலும் அபதாரம் விதிக்கப்படும். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை 6 மாதங்களுக்குள் பதிவாளரிடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |