ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 17-ஆம் தேதி முதல் திருப்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி அன்று அனுமதி அளிக்கப்பட்டதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்து, கோதை ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.