இந்தியாவை சேர்ந்த அன்ஷிகா என்ற இளம்பெண் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முடிவு செய்து அன்ஷிகா தூங்க செல்வதற்கு முன், தூங்கி எழுந்த பின் வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாறு குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருந்தார்.
அதேபோல் காலையில் ஓட்ஸ், பழங்கள் மதியம் உப்பு சேர்த்து வேக வைத்த காய்கறிகள், இரவில் முட்டையின் வெள்ளைக்கரு, ஃப்ரூட் சால்ட் சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் யோகாசனம், நடை பயிற்சி என உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை செய்துள்ளார். அதன் பலனாக அன்ஷிகா நான்கு மாதத்தில் 32 கிலோ எடையை குறைத்துள்ளார்.