பருப்புக்கீரை கடையல் செய்ய தேவையான பொருள்கள்:
பருப்புக் கீரை – 1 கட்டு
பாசிப்பருப்பு – 1/4 கப்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 4
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
தக்காளி – 1
உப்பு – தேவைக்கேற்ப
முதலில் கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.இப்பொழுது பாதி தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.பின் வெங்காயத்தை பொடியாக வெட்டவும் . பின்னர் குக்கரில் பருப்பை வேக வைத்து கொள்ளவும். பிறகு கீரை, பாதி தக்காளி, பாதி வெங்காயம், பூண்டு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்து ஆறியதும், மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவேண்டும் .
அதன் பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும் .
பின்னர் மிளகாய் தூள் வாசம் மாறியதும், பருப்பையும், கீரையையும் சேர்க்கவும்.சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும். சுவையான பருப்புக் கீரை கடையல் தயார்.