Categories
தேசிய செய்திகள்

ஆரம்பம் முதலே…. உ.பி.யில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாஜக…. 102 இடங்களில் முன்னிலை….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. தற்போது அந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதையடுத்து தற்போதைய நிலவரப்படி,தபால் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் நிலையில் உத்திரப் பிரதேசத்தில் பாஜக 102 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அதில் 102 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 57 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகிக்கிறது. பகுஜன் சமாஜ் மூன்று இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

Categories

Tech |