Categories
தேசிய செய்திகள்

ஆரத்தி எடுக்காத கோபத்தில்… ஏணியில் ஏறி வீட்டு கூரை மீது அமர்ந்த மணப்பெண்… வைரலாகும் சம்பவம்..!!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு என்று கூறுவார்கள். திருமணங்களில் நடக்கும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் மிக முக்கியமான ஒன்று. ஆனால் தற்போது திருமணங்களில் நடக்கும் சில வேடிக்கையான விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது.

திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு மணக்கோலத்தில் வந்த பெண்ணை ஆரத்தி தட்டுடன் மணமகன் வீட்டார் வரவேற்காத காரணத்தினால் கோபமடைந்த புதுமணப்பெண் ஏணியில் ஏறி கூரை மீது அமர்ந்து கொண்டு இறங்க மாட்டேன் என்று அடம் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சமாதானப்படுத்த முயன்ற மணமகன் ஏணியை கூரை மீது போட மதுரை எட்டி உதைக்கிறார் மணப்பெண். பின்னர் பெண் வீட்டார் அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்தனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது .

Categories

Tech |