தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். கடந்த ஜூலை 2 ஆம் தேதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 81 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள், திரைத்துறையினர் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலை இயக்குனர் சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட திருக்கடையூரில் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு தனது மனைவி ஷோபாவுடன் வந்து ஆயுஷோமம் செய்து கொண்டார்.
மேலும் தனது மகன் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதன் பிறகு தனது மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவியது. இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. பீஸ்ட் பட ஹீரோயின் பிறந்தநாலுக்கெல்லாம் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் அப்பாவின் 81 பிறந்த நாளில் கூடவாவது இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் பல கருத்துக்கள் எழுந்து வருகிறது .