ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படும் நிலையில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பழ சந்தை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து பழம் மற்றும் பூ கடைகள் தனியாக பிரித்து தற்காலிகமாக மாதவரம் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் பழம் வியாபாரம் அதிகம் நடைபெறும் என நம்பிக்கையுடன் இருந்த நிலையில்.
எதிர்பார்த்து வியாபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துவுள்ளன. கோயம்பேடு சந்தை அளவுக்கு மாதவரம் சந்தையில் விற்பனை இல்லாததால் பழங்கள் அலுகி இழப்பு ஏற்படும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.