பட்டு என்றவுடன் காஞ்சிபுரம், பனாரஸ், ஆரணி, ராசிபுரம் போன்ற பட்டுக்குப் பெயர்போன இடங்கள் நம் நினைவுக்கு வரும். அத்துடன் பாரம்பர்யம் என்னும் ஒரு சொல்லும். அந்த அளவுக்குப் பட்டு நம் கலாசாரத்துடன் இணைந்து இருக்கிறது.
இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் பனாரஸ் பட்டு இயந்திரங்களால் பலர் பட்டுகளை நெய்தாலும், இன்னும் கைகளால் புடவைகளை நெய்யும் பனாரஸ் பட்டு உற்பத்தியாளர்கள் பலர் இருக்கின்றனர். ஒரு பனாரஸ் பட்டின் விலை 30 ஆயிரமாக உள்ளது. திருமணங்களில் முகூர்த்த புடவை ஆக இது பயன்படுத்தப்படுகிறது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மலிவு விலை புடவைகளால் இதன் விற்பனையும், உற்பத்தியும் விளிம்பு நிலையில் உள்ளது.