Categories
அரசியல்

ஆம்புலன்சில் வந்து வாக்களித்த மூதாட்டி…. நெகிழ்ச்சியான சம்பவம்…..!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 31-வது வார்டில் மூதாட்டி ஒருவர் ஸ்ட்ரெச்சரில் படுத்த படுக்கையாக ஆம்புலன்சில் வந்து வாக்களித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்து ஓய்வு பெற்ற செவிலியர் அம்சா (70) தனியார் ஆம்புலன்சில் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமை ஆற்றினார்.

Categories

Tech |