Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கூடுதல் கட்டணம்…. உங்கள் பணம் உங்களுக்கே…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்கியுள்ளனர். பேருந்து, ரயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டது. ஆம்னி பேருந்துகளில் மூன்று நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது. பண்டிகை கால கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில தனியார் ஆப்ரேட்டர்கள் இஷ்டத்திற்கு வசூலிக்கப்படுகிறார்கள். இதனை போக்குவரத்து துறையை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தமிழக முழுதும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியது, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டி கூடுதல் சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்படுகிறது. நேற்று வழக்கமான பேருந்துகள் 2100 உடன் 1430 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதுவரை 91000 பேர் தமிழக முதல் பயணம் செய்துள்ளனர். தமிழக முழுவதும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெரிய அளவில் புகார்கள் இல்லை. இருப்பினும் பேருந்துகளில் கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆனால் குறிப்பிட்ட சில ஆம்னி பேருந்துகள் இணையதளம் மூலமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை அறிந்தால், அவற்றை அறிந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட பயனிடம் மீண்டும் டிக்கெட் கட்டணத்தை தாண்டி மீதம் கட்டணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |