Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” 48 மணி நேரத்தில்… 1310 ரவுடிகள் கைது….!!!!

தமிழகத்தில் நேற்று நடந்த ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் சிக்கியுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்தவர்கள் என்றும், இதில் 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர் மற்றும் முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கி உள்ளனர்.

பல வருடங்களாக தேடப்பட்டு வந்த 13 ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிடிப்பட்ட 979 ரவுடிகளிடம் நன்னடத்தை உறுதி மொழி பெறப்பட்டது என்றும், அதை மீறினால் 6 மாதம் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |