Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு…. பிரிந்து சென்ற மனைவி…. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு….!!!!

புதுச்சேரி திருக்ன்னூரில் ஐயனார்-சந்திரகலா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகியுள்ளது. அய்யனார் பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், ஊரடங்கின் காரணமாக வேலை இழந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு சரியான வேலை கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கிய தாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மனைவியின் நகைகளை அடகு வைத்து தனது செலவுகளை சமாளித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு சந்திரகலா தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அய்யனார் எலி மருந்து உண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும், அவர் ஆன்லைனில் விளையாட்டுக்கு அடிமையாகி 30,00,000 ரூபாய் வரை இழந்துள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட மனக்கசப்புலையே மனைவி பிரிந்து சென்றதாகவும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |