17 வயது சிறுவன் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருக்கும் திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஹேமந்குமார்-சண்முகப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாதவன் என்ற மகன் இருந்தான். கொரோனா பரவலால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் மூலமாக பாடம் எடுக்கப்படுகின்றது. ஆனால் மாதவனுக்கு ஆன்லைன் வகுப்புகளில் நடத்தும் பாடங்கள் புரியாததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். இந்நிலையில் நேற்று தனது அறையில் இருந்த மாதவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எதேச்சையாக மகனின் அறைக்கு சென்ற தாய், மாதவன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.