ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர் தற்கொலைகள் நடந்து வருவதால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் அரசிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்திருக்கிறார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரியும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் முறையீட்டுக்கு பதிலாக, மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை செய்வதாக நீதிபதிகள் ஒப்புதல் வழங்கி யுள்ளனர்.