ஆன்மிக சிந்தனைகள் நிறைந்த வாழ்க்கைக்கு தேவையான சொற்பொழிவுகளை விவேகானந்தர் நமக்கு கூறிருக்கிறார்..!
எண்ணமும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பின் சூட்சுமமாக நம்மிடமே திரும்புகின்றன. யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் இன்னொரு நல்ல நம்பிக்கையை அவர்களுக்குள் செலுத்துங்கள்..
இயற்கைக்கு கீழ்ப்படியாமல் இருப்பது தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி ஆகும். வரலாற்றை பார்த்தால் மனித வளர்ச்சி இதனால்தான் உண்டாகின்றது. மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் இல்லை. இதனால் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள்.
நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும் இறைவனே முன்நின்று உதவுவார். தொடங்கப்பட்ட முயற்சியில் தடை உண்டானால் மனவலிமை மேலும் அதிகப்படுத்தி பாடுபடுங்கள். விடாமுயற்சியுடன் செயலை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.இதுவே சிறந்த வாழ்விற்கான அறிகுறியாகும்.
பெரியவர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை. நமக்கு மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது நல்ல ஒரு செயலுக்காக உயிரை விடுவதே மேலானது.
தெய்வீகத் தன்மை இல்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களாக மாற்றி விடும். சண்டை போடுவதிலும், குறை கூறிக் கொண்டிருப்பதும் கூட என்ன இருக்கிறது. நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு உதவப்போவதில்லை. நம் மனநிலைக்கு தகுந்தவாறு உலகம் காட்சி அளிக்கிறது. நமது எண்ணங்களை பொறுத்துதான் உலகம் அழகாகவும், அவலட்சணம் உடையதாகவும் ஆகின்றது.