நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசை கேட்காமலேயே தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தமிழக அரசு அதிகாரிகள் கூறுகையில், தமிழ் நாட்டில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. நாளொன்றுக்கு 400 மெட்ரிக் டன் அளவுக்கு திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். ஆந்திராவுக்கு ஆக்சிஜனை அனுப்புவதால் எதிர்காலத்தில் தமிழகத்திற்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படாது” என்று தெரிவித்துள்ளனர்.