நெல்லையில் வாலிபரை மற்றொரு வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாரியப்பன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசித்துவந்த கூலித் தொழிலாளியான மாரியப்பன் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக முன்விரோதம் இருந்திருக்கிறது. இந்நிலையில் இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த கூலி தொழிலாளி மாரியப்பன் அரிவாளால் மற்றொரு மாரியப்பனுடைய மகனை வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.