உலகிலேயே அதிக விலையுடைய ராயல் பிரியாணி துபாய் ரெஸ்ட்டாரன்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே விலை உயர்ந்த பிரியாணியை துபாயில் இருக்கும் பாம்பே போரா என்ற ரெஸ்டாரண்ட் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதிக விலை என்பதால் இந்த பிரியாணிக்கு “ராயல் பிரியாணி” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் 23 கேரட் தங்கம் இந்த பிரியாணியில் கலக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த ராயல் பிரியாணியின் ஒரு பிளேட் விலையானது ரூபாய் 20,000 ஆகும். எனினும் இந்த ஒரு பிளேட் பிரியாணியை ஆறு நபர்கள் சாப்பிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரியாணி ரெஸ்டாரன்ட் ஆனது துபாயில் தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதனால் இந்த ராயல் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.