எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ பன்னீர் செல்வதற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 11ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதை எடுத்து அதிமுக அலுவலகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை அதிமுக அலுவலகத்திற்குள் யாரும் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த உத்தரவு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் இன்று முதல் கட்சி தொண்டர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் தங்களது சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அதிமுக தலைமை கழகம் சார்பில் இன்று திடீர் உத்தரவு ஒன்று பிரபிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலில் சேதம் அடைந்த பொருட்கள் அப்படியே கிடக்கின்றனர். கட்சியினர் உள்ளே நுழைந்தால் இது தொடர்பான ஆதாரங்கள் காணாமல் போக வாய்ப்புள்ளது. எனவே கட்சியினர் யாரும் அதிமுக தலைமை கலகத்துக்கு வர வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.