திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் அருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். தற்போது மாணவ- மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Categories
ஆண்டுதோறும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்….. அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்….!!!
