திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி சண்முகா நகரில் ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஹரிஷ் தனது வீட்டில் பல்வேறு செடிகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறார். அதில் ஒன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் செடி. இந்த செடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இது இரவில் மலர்ந்து பகலில் வாடும் தன்மை உடையது. இந்த பூவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Categories
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மலரும் “பிரம்ம கமலம் பூ”…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!!
