Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு சீருடை, ஷூ, முதலுதவி பெட்டி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பின்படி பதிவு பெற்ற ஆட்டோ டிரைவர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. எனவே பதிவு பெற்ற ஆட்டோ டிரைவர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், நல வாரிய அடையாள அட்டை போன்ற வற்றின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வந்து பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த பாதுகாப்பு உபகரணங்கள் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

Categories

Tech |