Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகினேஸ்புரம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கண்ணம்மாள் அப்பகுதியில் இருக்கும் வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண்ணம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கண்ணம்மாள்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |