ஆடு திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடம்பாடி கிராமத்தில் கடந்த மாதம் 24 -ஆம் தேதி உமேஷ், வினித் இருவரும் ஆடுகளை திருட முயன்று உள்ளனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் ஆடுகளைத் திருடி இறைச்சி வியாபாரத்திற்கு விற்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.