திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். பின்னர் கடந்த ஆண்டு ஆனந்தகுமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தகுமாருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் சிறுமியை கடத்தி சென்றதற்காக 3000 ரூபாய் அபராதமும், மூன்று ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை ஆனந்தகுமார் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.