Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆசிரியைக்கு தொல்லை கொடுத்த…. அரசு பள்ளி ஆசிரியர் கைது…. முதன்மை கல்வி அலுவலர் அதிரடி….!!

ஆசிரியைக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய வரலாறு ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சி பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்திரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சந்திரன் ஆசிரியை ஒருவருக்கு ஆபாச செய்திகளை அனுப்பியும் ஆபாசமாக பேசியும் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை உடனடியாக சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சந்திரனின் செல்போனை ஆய்வு செய்ததில் ஆபாசமாக பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரித்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலு ஆசிரியைக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த சந்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |