Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில் 14 சதவீதம் தேர்ச்சி… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2010 -ஆம் வருடம் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இந்த வருடத்திற்கான தேர்வு கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான  தேர்வு முடிவுகள் டிசம்பர் 7-ஆம் தேதி தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து அதில் தேர்வு தாள் ஒன்றில் 21 ஆயிரத்து 543 பேர் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை டி.ஆர்.பி யின் http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது திருத்தம் செய்வதற்கான கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |