பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி ஆசிரியர்கள் திடீர் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் திடீர் என்று போராட்டத்தில் ஈடுபட்டதால் விடைத்தாள் திருத்தும் பணி சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாகுவதிலும், மாணவர்கள் உயர் படிப்பில் சேர்வதிலும் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகலாம் என்று கூறப்படுகின்றது.