உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூர் என்ற பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் பயின்று வருகிறான். அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை மாற்ற மாணவர்கள் முன்பு திட்டியதால் அந்த சிறுவன் மனமுடைந்ததாக கூறப்படுகிறது.அதனால அந்த ஆசிரியரை பணி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருட்டுத்தனமாக நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தெருவில் நடந்து சென்ற ஆசிரியரை நோக்கி வேகமாக ஓடினான்.
அப்போது இதனை கண்டு தப்ப முயன்ற ஆசிரியரை விடாமல் துரத்திச் சென்று துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுள்ளான்.அதில் பலத்த காயமடைந்த ஆசிரியரை உடனே மீட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்து மட்டுமல்லாமல் தப்பி சென்று அந்த மாணவனையும் பிடித்தனர். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இருந்தாலும் சிறுவன் அவர்களிடமிருந்து தப்பிச் சென்று விட்டான்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற சிறுவனை தேடி வருகிறார்கள்.