Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசிய அளவிலான போட்டிக்கு தேர்வு…. தங்கம் வென்று சாதனை படைத்த மாணவிக்கு குவியும் பாராட்டுகள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நிர்மலா கல்லூரியில் திவ்யஸ்ரீ என்ற மாணவி பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நடைபெற்ற 17-வது யூத் அத்லெடிக் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடந்த மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட திவ்யஸ்ரீ முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கமும்  வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் அவர் அடுத்த மாதம்(அக்டோபர்) குவைத்தில் நடக்கும் ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். அவரை கல்லூரி நிர்வாகத்தினரும், பேராசிரியர்களும் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |