Categories
தேசிய செய்திகள்

ஆசியாவின் நம்பர் 1 பணக்கார பெண் பட்டியல்….. இந்திய பெண் சாவித்ரி ஜிண்டால் முதலிடம்….!!!!

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் இந்திய பெண் சாவித்ரி ஜிண்டால். இதனையடுத்து சாவித்ரி ஜிண்டால் ஆசிய முதல் பெண் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். புளூம்பெர்க் பில்லினர் இண்டக்ஸில் டாப் 10 ஆசிய பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். சாவித்ரி ஜிண்டால் உலோகம், மின் துறையில் உள்ள ஜிண்டால் குழுமத்தின் உரிமையாளர், நிறுவனரின் மனைவி என்ற வகையில் சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு 11.3 பில்லியன் டாலராக உள்ளது.

இவரைத் தொடர்ந்து சீனாவின் பேன் ஹாங்வே இரண்டாவது இடத்திலும், யாங் ஹூயன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 72 வயதாகும் ஜிண்டால் அவரது கணவர் ஓ.பி.ஜிண்டால் மறைவுக்குப் பின் ஜிண்டால் குழுமத்தின் தலைவராக இருக்கிறார். ஓ.பி.ஜிண்டால் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

Categories

Tech |