நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் முன்னதாக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கலாம் என திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஒப்புதல் அளித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தேவைப்படும் மாநிலங்களுக்கு நாங்கள் பகிர்ந்தளிப்போம். உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்குவதை தமிழக அரசு தடுக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாக உள்ள ஆக்சிஜனை தமிழகத்திற்கு தர முன்னுரிமை வழங்க முடியாது எனவும் கூறியுள்ளது.
இன்னியில் இது நீதி அல்ல. ஆக்சிஜனில் தமிழகத்திற்கு முன்னுரிமை இல்லை என்பது முறையல்ல. 20 வருசமாக இதற்காக போராடின அரசியல் வாதி நான் தான். ஸ்டெர்லைட் ஆலையை ஓட்டுவதற்கு இது ஒரு வழி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.