Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றுங்கள்…. அரசு அதிகாரிகளை அறிவுறுத்திய கலெக்டர்…. திருநெல்வேலியில் நடந்த ஆலோசனை கூட்டம்….!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் மழைநீர் வழித்தடங்களிலிருக்கும் ஆக்கிரமிப்பை உடனே அகற்றுவதற்கு அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகவிருப்பதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தினுடைய அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் விஷ்ணு ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கலெக்டர் கூறியதாவது, இயற்கை பேரிடர்கள் மற்றும் மழை போன்ற காலகட்டங்களில் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு சமுதாயக்கூடம், பள்ளி போன்றவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் நிவாரண உதவி மற்றும் மீட்பு பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் தயாராக இருக்க வேண்டும். இதனையடுத்து மழை நீர் செல்லும் வழித்தடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பு ஏதேனுமிருந்தால் உடனடியாக அதனை அகற்றி மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

இதனைத் தொடர்ந்து மழைநீரை அந்தந்த பகுதிகளிலிருக்கும் நீர்நிலைகளில் சேமித்து வைப்பதற்கு அனைத்து துறையை சார்ந்த அலுவலர்களும், தன்னார்வலர்களுடன் இணைந்து அதற்கான பணியை செய்ய செய்ய வேண்டும். அதன்பின் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படுகின்ற மருந்து, உரம் ஆகியவற்றை கையிருப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தினார். மேலும் மழைக்காலங்களில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கவும், கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு போன்றவை கிடைக்கவும் வழிவகை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில் பல முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |