Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட நகராட்சி கழிப்பறை அகற்றம்”… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!!!!

பழனி நகரின் மையப் பகுதியில் வையாபுரி குளம் அமைந்திருக்கின்றது. இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறைக்கு மதுரை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களுக்கு முன் வையாபுரி குளத்தில் நில அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் ஊன்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் குலத்தின் நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து நகராட்சி கட்டண கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை அகற்றுவதற்கு பொதுப்பணி துறையினர் முடிவெடுத்திருக்கின்றனர் அதன்படி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் பாளையம் பகுதியில் உள்ள அந்த கழிப்பறை கட்டிடத்தை பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்து அகற்றியுள்ளனர்.

முன்னதாக கழிப்பறையை இடித்து அகற்றுவதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். அவர்களிடம் பழனி,  சிவகுமார், போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி நகராட்சி ஆணையர் கமலா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஹை கோர்ட் உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டிருக்கிறது. அதனால் பாளையம் பகுதி மக்களிடம் கழிப்பிட வசதிக்கு தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் விரைவில் கழிப்பிட வசதி இல்லாத வீடுகள் பற்றி கணக்கெடுத்து அவர்களுக்கு கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உறுதியளித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |