Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 8 முதல் 10 ஆம் தேதி வரை ரத்து…. ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆக..8 முதல் 10-ந் தேதி வரை கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருப்பதியில் ஆண்டு முழுவதும் நடக்கக்கூடிய பூஜைகள், அர்ச்சனைகள், தெரிந்தோ தெரியாமலோ ஏற்படக்கூடிய தோஷங்களுக்கு பரிகாரமாக 3 நாட்கள் பவித்ர உற்சவம் நடைபெறும். இந்த பவித்ர உற்சவம் ஆக., 8 – 10 வரை நடைபெறவுள்ளதால், ஆர்ஜித சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |