கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது விமானக் கட்டணத்தில் சில வரம்புகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் விமான நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்தன. இந்நிலையில் உள்நாட்டு விமான சேவைக்கான கட்டணம் வரம்பு வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி உடன் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார் .
விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 21 ஆயிரம் ஆக உள்ளது. இது குறித்து பேசிய அவர், விமான எரிபொருள் விலையில் ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டவுடன் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான கட்டண வரம்பை அரசு மதிப்பீடு செய்யும் என தெரிவித்துள்ளார்.