Categories
Tech டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்…. BSNL 4ஜி, 5ஜி சேவை அறிமுகம்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

சி-டாட் உடன் டிசிஎஸ் தலைமையிலான கூட்டமைப்பு உள்நாட்டு 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க் தொழில் நுட்பங்களை உருவாக்கியுள்ளது. இது ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும் என்று அரசாங்கத்தால் நடத்தப்படும் BSNL தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். கன்வெர்ஜென்ஸ் இந்தியா நிகழ்ச்சியில் பேசிய டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்) நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் உபாத்யாய், இக்கூட்டமைப்பு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தொழில்நுட்பத்தை உள்நாட்டில் உருவாக்கியுள்ளது.

அதே சமயம் உலகளாவிய தொலைதொடர்பு நிறுவனங்களும் தொழில் நுட்ப வளர்ச்சியில் பில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது. இந்த வேலையை நாங்கள் முடிக்கப் போகிறோம், விரைவில் இந்த நெட்வொர்க் BSNL நெட்வொர்க்கில் வரிசைப்படுத்தப்படும் என்ற நல்ல செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது 4G மட்டுமின்றி, 5ஜி (non-standalone access) இந்த வருட சுதந்திர தினத்தன்று அறிமுகமாகும் என்று உபாத்யாய் கூறினார். BSNL தலைவரும் நிர்வாக இயக்குநருமான பி.கே.புர்வார் ஒரு ஊழியர் நிகழ்வில், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்று கூறினார்.

நாட்டிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு இணையாக 5ஜி சேவைகளை வெளியிட BSNL நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கவேண்டும் என தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையில் BSNL 4ஜி நெட்வொர்க்குகளுக்கான சோதனைகளை டிசிஎஸ் தலைமையிலான கூட்டமைப்புடன் நடத்தி வருகிறது. இவற்றில் சி-டாட் ஒரு தொழில்நுட்ப பங்காளியாக இருக்கிறது.

Categories

Tech |