Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 14 வரை இரவு நேர முழு ஊரடங்கு – ஆந்திர அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த ஆகஸ்ட் 14ம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் நாளை முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகளில் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை விநியோகம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |