Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் முதல் “ஆன்லைன் டாக்ஸி சேவை”….. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தனியார் ஆன்லைன் டாக்ஸி சேவை போல கேரளா அரசு சார்பாகவும் ஆன்லைன் மூலமாக டாக்ஸி சேவை தொடங்கப்படுகிறது. இந்த சேவையானது கேரளா சவாரி என்ற பெயரில் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறையின் மந்திரி சிவன் குட்டி கூறுகையில், நாட்டில் ஒரு மாநில அரசே முதல் முறையாக ஆன்லைன் டாக்ஸி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறை.

இந்த சேவையை அரசுத்துறை நடத்துவது ஒருவேளை உலக அளவில் முதன்மை நிகழ்வாக இருக்கலாம். இதில் முழுமையான பாதுகாப்பு மற்றும் பயணம் என்பது கேரளா சவாரியின் வாகுறுதியாகும். தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ள ஆட்டோ, டாக்ஸி தொழிலாளர்களுக்கு தனித்துவமான இந்த சேவை ஒரு உதவிகரமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |