Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ என்ன விட்டுட்டு போயிட்டா…. தொழிலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காடச்சநல்லூர் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் லோகேஷ் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் லோகேஷின் மனைவி கோபித்துக்கொண்டு நாகப்பட்டினத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து லோகேஷ் மீண்டும் மனைவியை தொடர்பு கொண்டு தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இதற்கு அவர் வர மறுத்து பெற்றோர் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் லோகேஷ் மனமுடைந்து வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பள்ளிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லோகேஷ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |