Categories
சினிமா

அவர் வேற லெவல்!…. கூல் சுரேஷுக்கு நன்றி சொன்ன நடிகர் சிம்பு…. காரணம் என்ன?…..!!!!

கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கிறது. முன்பே இந்த மூவர் கூட்டணியில் வெளியாகிய “விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களின் வரவேற்பை அடுத்து “வெந்து தணிந்தது காடு” படத்தின்மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது அதிகரித்து உள்ளது. இத்திரைப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.

இந்த படம் இன்று தமிழகம் முழுதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியது. ரசிகர்கள் இதை விழாக் கோலமாக கொண்டாடி வருகின்றனர். அதன்பின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து சமூகவலைதளத்தில் பேசிய நடிகர் சிம்பு ”அனைவரும் மனசார கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லி தான் ஆகவேண்டும். ஏனெனில் அவர் வேற லெவல். படத்துக்கு அவர் தனிபுரொமோஷன் செய்து இருக்கிறார். ஆகவே நன்றி கூல் சுரேஷ்” என கூறினார்.

Categories

Tech |