விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக்பாஸ் 5. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருப்பவர் விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா. ஆரம்பத்தில் தனது நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்து வந்த இவர் தற்போது கடந்த சீசன் அர்ச்சனாவை போன்று மாறுவதாக ரசிகர்கள் நினைக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் ஆகி வீட்டை விட்டு வெளியேறிய நாடியா தனது கணவரைப் பற்றி கூறும்போது நெகிழ்ந்து போன பிரியங்கா நாடியாவின் கணவரை கட்டி அணைத்து முத்தம் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். இதனை பிரியங்கா பாசத்தினால் கூறியிருந்தாலும் அடுத்தவர் கணவரை இதுபோன்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.