நடிகர் மணிகண்டனின் திறமையை பார்த்து உலகநாயகன் கமலஹாசன் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
நடிகர் மணிகண்டன் தற்போது வெளியான ஜெய்பீம் படத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். இப்படத்திற்கு பிறகு நடிகர் மணிகண்டன் பிசியாக நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தின் நடிப்பில் பின்னி இருக்கிறார். இம்மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் நன்றாக இருந்தால் பாராட்டும் குணம் உடையவர் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள்.
அவர் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தைப் பார்த்துவிட்டு பட குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது நடிகர் மணிகண்டனை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், கமல் சார் திரையுலகின் வாத்தியார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. கமல் சார் பாராட்டுவதை விட பெரிய சந்தோசம் எதுவும் இல்லை எனக்கு.கமல் சாரோட தூங்காவனம், விஸ்வரூபம் படத்தில் கூட்டத்தில் நிற்கிற ஆளா டப்பிங் ஆர்டிஸ்ட் வேலை பார்த்த எனக்கு இதைவிட பெரிய சந்தோசம் வேற என்ன இருக்கப்போகிறது என்று நெகிழ்ந்து விட்டார்.