அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதையடுத்து இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
The man. The Legend. Shooting with him is a dream I can finally tick off my dream list. Enough said. Stay tuned for more.. 😉 @SrBachchan #whendreamscometrue pic.twitter.com/hAzspPq50C
— Pooja Hegde (@hegdepooja) November 22, 2021
மேலும் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளப் பக்கத்தில் அமிதாப் பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘மனிதன். மேதை. அவருடன் நடிக்க வேண்டும் என்பது கனவு. இறுதியாக எனது கனவு பட்டியலில் டிக் செய்துவிட்டேன்’ என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .